திங்கள், 29 அக்டோபர், 2012

முள்ளுசீதா


முள்ளுசீதா மரம்.


முள்ளுசீதா.

மூலிகையின் பெயர் :– முள்ளுசீதா.

தாவரப்பெயர் :– ANNONA MURICATA.

தாவரக்குடும்பம் :- ANNONACEAE.

வேறு பெயர்கள் :– GRAVIOLA, SOURSOP, BRAZILIAN-PAW-PAW, GUNABANA. ஆகியன.

பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பழம், பட்டை, வேர் மற்றும் விதை முதலியன.

வளரியல்பு :– முள்ளுசீதா எல்லாவகை மண்ணிலும் வளரக்கூடியது. இது ஒரு சிறிய பழம் தரும் மரம். இது சீதா வகையைச் சேர்ந்தது. முள்ளுசீதா சுமார் 20 – 30 அடி உயரம் வளரக்கூடியது. இது அதிகமான  கிழைகளைக் கொண்டது. இதன் தாயகம் ‘CARIBBEAN’ மற்றும் மத்திய அமரிக்கா. இதன் வெப்ப தட்ப நாடுகளில் உலகம் முழுதும் பரவலாயிற்று. தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும். இதன் இலைகள் கிழைகளில் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும்.  நீள வாக்கில் கொய்யா இலை போன்று ஓவல் வடிவத்தில் காணப்படும். இலைகள் 8 – 16 செண்டி மீட்டர் நீளம் இருக்கும். அகலம் 3 -7 செண்டி மீட்டர் இருக்கும். இது கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் இலைக்கு எதிர் பக்கத்தில் காம்புப்பகுதியில் பூக்கும்.  ஒன்று அல்லது இரு பூக்கள் பூக்கும். பூ இதழ்கள் கெட்டியாக இருக்கும். சிறு முடி இருக்கும் (15 எம்.எம்.) மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதழ்கள் இதய வடிவில் இருக்கும். இதன் சூழ் முடிகளால் சிகப்பாக சூழ்ந்திருக்கும். இதன் காய்கள் பச்சையாக சிறு சிறு முள் நுனிகளுடன் ஓவல் போன்று பெரிதாக இருக்கும்- சுமார் 30 செண்டிமீட்டர் அளவு இருக்கும். உள் பாகத்தில் விதைகளுடன் வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும். விதைகள் சுமார் 470 கிராம் எடை இருக்கும்.  மூன்று நாட்கள் காய வைத்தால் 322 கிராம் எடையாகக்குறையும். இதன் பழம் உண்ணக்கூடியது. சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து அன்னாச்சிப்பழம் போன்று இதன் சதைப்பகுதிகள் சுவை இருக்கும். இந்தப் பழத்தில் ஒரு அமிலத்தன்மை ஏற்படும் அதனால் இதை ‘SOURSOP’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முள்ளுசீதாப் பழங்கள் தற்போது ஊட்டி செல்லும் வழியில் பரலியாற்றிலும், கொடைக்கானலிலும் கிடைக்கிறது. கிராமங்களில் இதை இராம் சீத்தா என்று அழைக்கிறார்கள். ஆய்வுக்குறியது. காய்ந்த பதப்படுத்திய விதையிலிருந்து விதைத்து நாற்றுக்கள் உற்பத்தி செய்து இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :– முள்ளுசீதா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்த போது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாகப் பயன் படுத்தி குணம் கண்டனர்.  முக்கியமாக இதன் இலை, பழம் இவைகளை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்தப் பயன் படுத்தினார்கள். அமரிக்காவில் இதை ஆய்வு செய்து புதிய செல்களை உற்பத்தி செய்து கெட்ட நோய் செல்களை அழித்து நல்ல பலன் கிட்டுவதைக் கண்டு பிடித்தார்கள். மேலும் அதில் பக்க விழைவுகள் இல்லையென்பதையும் கண்டறிந்தார்கள். ‘கிமோதெரப்பி’ என்னும் சிகிச்சையில் முடி கொட்டி விடுகிறது மற்றும் உடல் மெலிந்து எடை குறைந்து விடுகிறது. ஆனால் இயற்கையான முள்சீதாவில் அதைவிட புற்று நோய் செல்களைக் கொல்வதில்10,000 மடங்கு சக்தி வாய்ந்தது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை.

இதன் இலைகள் மருத்துவ குணம் இருப்பதால் காயவைத்துப் பதப்படுத்தி ‘டீ’ போன்ற பானமாக மேல் நாட்டில் அருந்துகிறார்கள். இதை வியாபார நோக்குடன் சில கம்பனிகள் செய்து வருகின்றன.


முள்ளுசீதா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டு பிடித்தார்கள். மேலை நாடுகளில் பல நாடுகள் இதன் மருத்துவ குணம் நன்கு அறிந்து பலவிதமான நோய்களைக் குணப்படுத்தினர். அவை புற்று நோய் கட்டிகள், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் கற்பப்பையில் புற்றுநோய்கள் மார்பகப்புற்று நோய் அகியவற்றைக் குணப்படுத்தினர். இரத்த அழுத்தம், குறைவு, அதிகரிப்பு இவைகளையும் குணப்படுத்தினர். மேலும் ஆஸ்த்துமா, வயிற்றுப்போக்கு, காச்சல், புண், குடல் புண், புளுகாச்சல், ஈரல் பாதிப்பு, தோல் வியாதிகள், நரம்பு தளர்ச்சி, நடுக்கம், டென்சன், இருதயக்கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல், வயிற்றுவலி போன்ற நோய்களையும் இதன் மூலம் குணப்படுத்தினர்.  மருந்து உண்ணும் அளவு மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மேல் மிகாமல்.. அதிகமாக உட்கொண்டால் வாந்தியை உண்டு பண்ணி பக்க விளைவுகள் ஏற்படலாம். கற்பிணிப் பெண்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

முள்ளுசீதா காய்.

----------------------------------------------------------------(தொடரும்)

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம் ஐயா..

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான விளக்கம்! அறியாத தாவரம்! அரிய தகவல்கள்! நன்றி!

kuppusamy சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி சுரேஸ்.