திங்கள், 14 பிப்ரவரி, 2011

பழம்பாசி.




1.  மூலிகையின் பெயர் :- பழம்பாசி.

2.  தாவரப்பெயர் -: SIDA CARDIFOLIA.

3.  தாவரக்குடும்பம் -: MALUACEAE.

4.  பயன் தரும் பாகங்கள் -: சமூலம்.

5.   வளரியல்பு -:  பழம்பாசி ஒருசிறிய செடி
யாகும். இதன் இலைகள் இதைய வடிவமாக  
பச்சையாக இருக்கும்.  இதன் பூக்கள்  கரு  
ஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக  
இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு
மொசுப்பான  முடிகள் இருக்கம். இது 50-200  
செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியதுஇதன்  
தண்டு பசுமை கலந்த மஞ்சள்  நிறத்தில் இருக்
கும்இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில் பின் 
இது இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 
தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா 
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.  
இது எல்லா வகை நிலங்களிலும் வளரக்
கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும்,  
சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது.  
இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள் 
விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.


6.  மருத்துவப்பயன்கள் -: பழம்பாசியின் இலை  
சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின்   
எடையை குறையச்செய்தல், இரத்த அழுத்தம்  
குறையச் செய்தல்   காச்சல், நரம்புத்தளர்ச்சி,  
ஸ்த்துமா, வலிப்புகளைப்  போக்கல், தாது  
வெப்பகற்றுதல் போன்ற குணங்களை
யுடையது. வேர் எண்ணெய் காயத்தைக்  
 குணமடையச் செய்யும் தன்மையுடையது.

இதன் இலையுடன் சிறிது பச்சரிசி சேர்தரைத்
துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு  
வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

20 கிராம் இலையைப் பொடியாய் அரிந்து  
அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து  
வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 
3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும்.  
இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக்  
காலை  மாலை கொடுத்து வர  இரத்த்க்  
கழிசல், சீதக் கழிசல்ஆசனம் வெளித்தள்ளல்  
ஆகியவை தீரும்



-----------------------(தொடரும்)


கருத்துகள் இல்லை: