வெள்ளி, 18 டிசம்பர், 2009

இலந்தை.





1. மூலிகையின் பெயர் :- இலந்தை.

2. தாவரப்பெயர் :- ZIZYPHUS JUJUBA.

3. தாவரக்குடும்பம் :- RHAMANACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பட்டை. வேர்பட்டை பழம்ஆகியவை

5. வளரியல்பு :- இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.


---------------------------------------------------(தொடரும்)

17-12-2017-
இது பேஷ்புத்தகத்திலிருந்து இன்று எடுத்துப் போடப்பட்டது.

நமது தோட்டத்தில் இழந்தை மரம் இருக்கிறது அதை தினமும் தொடர்ந்து சாப்பிட்டபோது பல பல மாற்றங்களை உணர்ந்தேன் அப்போது நாமக்கல்லில் உள்ள நமது உறவினர் ஒருவர் இழந்தைபழம் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுபடுவதாக கூறியது நினைவிற்கு வந்ததும் நம்மிடம் பணிபுரியும் இருவருக்கு இந்த பழத்தை இரண்டு கைப்பிடியளவு சாப்பிட தந்ததும் தொடர்ந்து இருபது நாட்களில் சர்க்கரையின் அளவு 280 லிருந்து 160 க்கு குறைந்தது தெரிய வந்தது மற்றொருவருக்கு 340 லிருந்து 200 க்கு குறைந்ததும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது இத்துடன் சர்க்கரையை குறைக்க மூலிகை பொடியையும் சேர்த்தே கொடுத்தேன்
அவர்களின் கூற்று.....
கைக்கால் குடைச்சல் மற்றும் உடல் வலி சோர்வு என்பது துளியும் ஏற்படவில்லை என்பதை கேட்கும் போது ஆஹா இவ்வளவு மேட்டர் இதிலிருக்கா என்று இதை பற்றிய ஆய்வு செய்ய முயன்றேன்.......பித்தத்தை சமநிலை படுத்தி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகபடுத்தி உடலில் உள்ள சர்க்கரையை எரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது இதனால் தான் இழந்தை பழம் சாப்பிட்டால் வாந்தி தலைசுற்றல் மயக்கம் எல்லாம் தீரும் என்பது இதன் அடிப்படையில் தான் எங்க அக்கா பேருந்து பயணத்தில் வாந்தி எடுக்கும் அப்போதெல்லாம் இழந்தை பழம் அல்லது இழந்தைவடை ஏதாவது ஒன்றை வாயில் போட்டு அடக்கி வைத்து கொள்வாங்க...
எனது அக்கா தங்கைகள் எல்லோரும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக சின்னபாப்பா எனும் மருத்துவச்சி ஆயா உண்டு எங்கள் ஊரில் அவரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிடுவது உண்டு அவர் இழந்தைஇலை மற்றும் மிளகு பூண்டு இவற்றை கைஅம்மியில் அரைத்து கோலியளவு தருவார்கள் வலி உடனடியாக போய்விடும் மேலும் அந்த நாட்களில் ஏற்படும் தலைவலி தலையில் நீர் கோர்த்தலுக்கு இதன் இழை அருமையான மருந்து என்று கூறியதையும் கவனத்தில் கொள்வோம் மேலும் அவரிடம் வினவியதற்கு குழந்தைபேறு இல்லாதவர்களுக்கும் இதை கொடுத்தால் கர்ப்பபையில் உள்ள வாயுவை வெளியேற்றி குழந்தை உருவாக காரணமாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன் .....
பாலைவன பகுதிகளில் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்க இழந்தை இலையை நீரில் போட்டு குளிந்தாலோ அல்லது குடித்தாலோ மட்டுபடுகிறது என்பதை அறிந்த்தால் தான் நபிகள் நாயகம் அவர்கள் இதை பற்றிய மருந்துவ குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் மேலும் ஆரேபிய பகுதிகளில் இறந்தவர்களை இந்த இலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிபாட்டியதிலிருந்து இன்னொன்றையும் உணரமுடிகிறது இது மிகச்சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது என்பதையும்
மேலும் அதிவியர்வைக்கு அருமருந்து இது தான் இதன் இலைகளை பரித்து நன்றாக அறைத்து அதன் சாற்றை உள்ளங்கை உள்ளங்காலில் தடவி காலையில் எழுந்து இதன் தலையை போட்டு கொதிக்க வைத்த நீரில் குளித்து பாருங்கள் ஒரு வாரம் உள்ளங்கால் கை வியர்த்தல் பூரண குணமாகும் ....
நபிகள் இதை சிறப்பாக குறிப்பிட வியர்வையின் மூலம் உடலில் உள்ள நீர்சத்து குறைவதை மட்டுபடுத்துவதனால் தான் இவற்றை கொண்டாடி இருக்கிறார் பாலைவன பகுதிகளில் உள்ளவர்களுக்கே இதன் அவசியம்புரியும் ......
இது வரண்டநில தாவரம் ஆதலால் இதன் குணங்களும் அதிகம் என்பது உங்களுக்கும் தெரியும் பேரீட்சையை சாப்பிட்டு உணர்ந்த நல்ல விடயங்களை விட இழந்தைபழத்தை சாப்பிட்டு நான் உணர்ந்தது மிக மிக அதிகம் மிகவும் சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது சோர்வோ கொட்டாவியோ வரவே வராது எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலியோ இயலாமையோ ஏற்பட்டதில்லை எனக்கு..... சேலம் சிவராஜ் கிட்ட லேகியம் வாங்கி சாப்பிடுபவர்கள் பதினைந்து நாள் தொடர்ந்து இழந்தைபழத்தை சாப்பிட்டு விட்டு அப்புறம் சொல்லுங்கள் இழந்தை பழம் இழந்ததை மீட்கும் என்று .....
மேலும் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட கூட்டகூடும் அதற்கான நிறைய முகாந்திரங்கள் உண்டு யாராவது பயன்படுத்தி பின்பு சோதித்து அதன் முடிவை தெரியமடுத்துங்கள் .....
அற்புதமான முன்னேற்றத்தை உணர்வீர்கள் இதன் சிறப்பம்சத்திற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் ,சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகுதியான இருப்பதனாலே அதனால் தான் நரம்பு மண்டலம் வலுவடைகிறது இதன் காரணமாக ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது... என்கிறார்கள்
ஒருவேளை இவற்றில் நைட்ரஜனும் இருக்க கூடும் ....ஆய்வுக்குரியதே...
பொட்டாசியம் உள்ளதால் கொஞ்சம் தொண்டை கட்டகூடும் சிலருக்கு அவர்கள் மிளகு தூளையும் உப்பையும் தூவி சாப்பிடுங்கள் .....
அதிக விலை கொடுத்து வாங்கும் கிவி,ஆஸ்திரேலிய ஆப்பிள் போன்ற மேற்கத்திய பழங்களை விட பத்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடும் இழந்தையின் சிறப்பு 100 மடங்கு சிறப்பானவை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்
சிறியதே அழகு (small is beautiful)
இது எங்கிருந்தும் copy paste செய்யபட்டப பதிவு அல்ல அனுபவத்தின் வெளிபாடு.





4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்,

தங்களின் சேவை நாட்டிற்கு அத்தியாவசிய தேவை. உண்மையில் செவி வழி செய்தியாக மற்றும் தின உணவாக உண்ட பல விஷயங்கள் இன்று மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு மனித சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் காலத்தில் தங்களின் சேவை நாட்டிற்கு அத்தியாவசிய தேவை.

மிக்க நன்றிகள்.

kuppusamy சொன்னது…

வணக்கம்,
எனது வலைப்பதிவை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. அன்றைட வாழ்வில் நாம் காணும் செடி கொடிகள், மரம் பட்டை,காய் கனிகள் இலை, பூக்கள் இவைகளின் மருத்துவ குணங்கள் சில நமக்குத் தெறியாமல் மறைக்கப் பட்டிருக்கின்றன. இவைகளை மக்கள் யாவரும் அறிந்து கொள்ளும் எண்ணத்தில் படத்துடன் வெளியிடுகிறேன். உங்கள் பாராட்டுக்கு மேலும் நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன்.

Pandian R சொன்னது…

இலந்தையின் பூர்வீகம் சைனாவா? நல்ல செய்தி அய்யா. சீமை இலந்தையும் அதே ஊரைச் சேர்ந்ததா?

kuppusamy சொன்னது…

சீமை இலந்தையும் பிறப்பிடம் சைனாதான். பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி.