புதன், 29 அக்டோபர், 2014

நரிமிரட்டி.




 
நரிமிரட்டி இலை, பூ.
நரிமிரட்டி.

மூலிகையின் பெயfர் –: நரிமிரட்டி.

தாவரவியல் பெயர் –: CROTALARIA VERRUCOSA.

தாவரவியல் குடும்பம் –: PAPILIONACEAE, FABACEAE.

பயன்தரும் பாகங்கள் –: முழுதாவரம்.

வேறு பெயர்கள் -: கிலுகிலுப்பை, நரிவிரட்டி, சோணபுஷ்பி மற்றும் சங்குநிதி.

வளரியல்பு –: நரிமிரட்டி காடு மலைகள்ளில் தானே வளரக்கூடியது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது 50 செ.மீ. முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் முக்கோண வடிவத்தில் சுமார் 5 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை நீளம் இருக்கும் இதன் காம்பு 2 – 4 எம்.எம். நீளமிருக்கும். பூக்கள் நவம்பர் மாத த்தில் பூக்கும். நுனியில் சுமார் 10 பூக்கள் வரை பூக்கும். இதன் நீளம் 9 எம்.எம். இருக்கும். இதழ் 1.5 செ.மீ.. இருக்கும். பூ ஊதா நிறமும் வெள்ளையும் கலந்திருக்கும். கருநீல வரிகள் இருக்கும். காய் 5 – 10 எம்.எம். நீளத்தில் இருக்கும். காயினுள் 28 முதல் 32 விதைகள் இருக்கும். அவை முற்றிக் காய்ந்தால் உள்ளிருக்கும் விதைகள் காற்றில் ஆடும் போது ஒரு வித சத்தத்தை உண்டாக்கும் வெப்ப சீதோஸ்ணமான இடம் இதற்கு ஏற்றது. இது ஒரு வராடாந்திர புதர் செடி, இதை வேலிக்காகவும் அழகுக்காகவும் வளர்ப்பார்கள். இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுத்து வியாபார நோக்கில் விற்பார்கள். இந்த நரிமிரட்டிக்கு ஆங்கிலத்தில்  BLUE RATTLESNAKE, RATTLEPOD, BLUEFLOWER என்ற பெயர்களும் உண்டு.இந்தபுதர்செடி பங்களாதேஸ்,  சீனா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மாயின்மர், நேபால், பிலிப்பைன், இலங்கை, தாய்லந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா மற்றும் அமரிக்காவில் அதிகமாகக் காணப்படும். நரிமிரட்டி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

நரிமிரட்டியின் மருத்துவப் பயன்கள் –: இதன் செய்கைகள் கசப்பு, துவர்ப்புச் சுவைகள், வாந்தியாகச் செய்தல், இது அஜீரணம், கபம், காய்ச்சல், தொண்டைநோய், இதய நோய், பித்தம், பென்னி பாதம் செயல் உடையது.  இதன் இலையிலிருந்து டீ பானம் தயாரித்துக் குடித்தால் தலைவலி, குளிர் காய்ச்சல், தோல் வியாதிகள், வயிற்றுவலி, சொறி சிறங்கு, ஆகியவை குணமாகும், கிட்னி, லிவர், காமாலை,  நோய்கள் குணமாகும். மேலும் பாம்புக்கடி, குடல்புண், மூத்திரக் கோளாறு, குடல் புழு, வயிற்றுப் போக்கும் குணமாகும். இது கால்நடைகளுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களை பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்த வல்லது.. இதைப் பற்றி போகர் எழுதியதை கீழே காணலாம்.
Author: தோழி / Labels: போகர், வசியங்கள்
சமீப நாட்களில் வன விலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வந்து விடுவதாகவும், அதனால் மக்களுக்கு துயர் உண்டாவதாகவும் பல செய்திகளை பத்திரிக்கைகளீல் பார்க்க முடிகிறது. நாம் அவற்றின் வாழ்விடங்களான வனப் பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியதுதான் இத்தகைய நிலைக்கு காரணம்.

முற்காலத்திலும் கூட மனிதன் தன் தேவைகளுக்காக அடர் வனங்களின் ஊடே வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிருகங்களோடு இணக்கமாயிருக்கும் உத்திகளை கைக் கொண்டிருந்தனர். இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய பல மிருக வசியங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் சில வசிய முறைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை பார்ப்போம். இந்த தகவல்போகர் 7000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
                                                                                 
தானென்ற மூலிநரி விரட்டிக்கப்பா
தப்பாமா லாதித்த வாரந்தன்னில்
வண்மையுடன் ஓம்சடா சடாவென்று
ஆனென்ற வாயிரத்தெட் டுருசெபித்து
வவ்வேரை மறுவாரம் பிடுங்கிக்கொள்ளே
குறியான வேரையுநீ பிடுங்கிக்கொண்டு
நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு
நலமான செப்புகுளிசத்திலடைத்துக்கொள்ளே
அணிவாய் முன்னுருவே தியானஞ்செய்து
ஆச்சரிய மந்திரத்தான் மிருகஞ்சேராது.
நரிவிரட்டி என்றொரு மூலிகை உண்டு. இதற்குநரிமிரட்டி”, “கிலுகிலுப்பை”, “பேய்மிரட்டிஎன வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை தேடி கண்டு பிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் அந்த செடியின் முன்னர் அமர்ந்து  "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை 1008 தடவைகள் செபித்துவிடவேண்டுமாம். பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியினை பறித்து அதன் வேரை பிடுங்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம்.

செம்பினால் ஆன தாயத்து ஒன்றினை செய்து, அதில் காயவைத்த நரிமிரட்டி வேரினை அடைத்து, "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை முன்னூறு தடவைகள் செபித்துக் பின்னர் அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவரை மிருகங்கள் நெருங்காது என்கிறார் போகர்

ஆச்சர்யமான தகவல் தானே!
நன்றி சித்தர்கள் இராச்சியம் தளம்..

------------------------------------------------------------------(தொடரும்)



கருத்துகள் இல்லை: