புதன், 27 பிப்ரவரி, 2013

BASIL.- பேசில் துளசி.



BASIL.


BASIL.

மூலிகையின் பெயர் :– BASIL.- பேசில் துளசி.

தாவரப்பெயர் :– OCIMUM BASILICUM.

தாவரக்குடும்பம் :– LAMIACEAE.

முக்கிய வகைகள் :– BOXWOOD BASIL,  CINNORMON BASIL,  LEMON BASIL,  MAGICAL BASIL,  GENOVESE BASIL,  GREEK COLUMN BASIL,  NAPOLITANO BASIL, OSMIN BASIL,  PESTO PERPETUA BASIL,  PURPLE RUFFLES BASIL,  REDRUBIN BASIL,  SIAINS QUEEN BASIEL,  & SPICY BUSH BASIL.

பயன் தரும் பாகங்கள் :– இலை, பூ, விதை மற்றும் வேர் முதலியன.

வளரியல்பு :– பேசில் துளசி எல்லா வகை வளமான மண்ணில் மற்ற துளசியைப் போன்று வளரக்கூடியது. இதற்கு வெப்பமான கால நிலை அவசியம். (70 டிகிரி F ஹீட்) அதிக குளிர் ஆகாது. இதன் தாயகம் இந்தியா. இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளான கிழக்கு ஆசியா, இத்தாலி, இந்தோனேசியா, தாய்லண்டு, வியட்னாம், கம்போடியா, சீனா, மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ‘BASIL’: என்ற சொல் கிரேக்கத்திலிருந்து தோன்றியது. அதன் பொருள் ‘KING’ அரசன் என்பது.  ‘KING OF HERBS’ மூலிகையின் அரசன் என்று சொல்வார்கள். இதில் 160 வகைப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக பெயர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலைநாடுகளில் பேசில் இல்லாத சமையல் அரையே இருக்காது அவ்வளவு முக்கியத்துவம் வாய்தது.

பேசில் விதை மிகச்சிறிதாகக் கடுகு போன்று கருப்பாக இருக்கும். இதை விதைக்க செடியிலிருந்து எடுத்து ஒரு ஆண்டுக்குள் பயன் படுத்த வேண்டும்.
பசுமைக் குடிலில் மேட்டுப்பாத்தி அமைத்து நல்ல நுண்ணுயிர் உரம் இட்டு மிருதுவான மண்ணில் கால் அங்குல ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். காய்ந்த நிலமாக இருக்கும். பூ வாழியில் நீர் தெளிக்க வேண்டும். மேலும் ஈரப்பசை இருந்து கொண்டு இருக்க வேண்டும் . அதே சமயம் சுமார் 6 மணி நேரம் வெய்யில் படவேண்டும்.  வளர்ந்த நாற்றுக்களை பாலத்தின் பைகளில் எடுத்து வைத்துப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஆறு வாரங்கள் நிழலில் இருக்க வேண்டும். வெப்ப அளவு 70 டிகிரி பேரன் ஈட் இருக்க வேண்டும். பிறகு பார்களில் 10-12 அங்குல இடைவெளியில் நாற்றுக்களை நட வேண்டும். இதன் இலைகள் பச்சையாக இருக்கும். இலையின் நீளம் 3-11 செண்டி மீட்டரும், அகலம் 1-6 செண்டி மீட்டரும் இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மிகவும் மிருதுவாக இருக்கும். நறுமணம் உடையதாக இருக்கும்.  இது சுமார் 30 -130 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. பூக்கள் மிகச்சிறிதாக இருக்கும். வெள்ளை நிறத்தில் இருக்கும். 40 நாட்கள் ஆனவுடன் பக்கக்கிழைகளை அடிபாகம் சிறிது விட்டுக் கத்தரிக் கோலால் வெட்டி உபோகிக்கலாம். இது வெட்ட வெட்டத் துளிருத்துக் கொண்டே இருக்கும் அதற்குத் தக்கவாறு நுண் உரம், ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஆண்டு வரை பயன் தரும். பூ விட ஆரம்பித்தால் இலை பழுப்புத் தட்ட ஆரம்பிக்கும், அப்போது உரம் தண்ணீர் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நோய் வர ஆரம்பித்தவுடனே இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். இரசாயனம் சேர்க்கவே கூடாது. இது விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- பேசில் முக்கிய இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகைச் செடி.(Natural anti-inflammatory). இது சமையலில் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. பேசியல் இரத்த ஓட்டத்தைச சமநிலையில் வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. இரத்தத்தில் சர்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது. உடலின் சூட்டைத் தணிக்க வல்லது. இது மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தீர்க்க வல்லது. தோல் வியாதிகளைப் போக்க வல்லது. இதன் எண்ணெய் புற்று நோயைக் குணப்படுத்தும். இதில் “’CINNAMANIC ACID”  என்ற அமிலம் உள்ளது. இது இந்த நோயைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது.  இது முகப்பருவை குணமாக்கும். பேசில் மனிதனுக்கு உயிருடன் இருக்க உதவும் தோழன். இது பெண்களுக்குள்ள மலட்டுத் தன்மையைப் போக்க வல்லது. சர்கரை வியாதியைக் குணப்படுத்தும். மூச்சுக் குழலில் ஏற்படும் மூச்சுத்திணரலைக் குணப்படுத்தும். இது ஒவ்வாமையை குணப்படுத்தும். ஆண்களுக்கேற்படும் மலட்டுத் தன்மையைக் குணப்படுத்தும். பேசிலில் உள்ள CINNAMANIC ACID  இரத்தத்தில் உள்ள சர்க்கரையைப் போக்கி இரத்த நாணங்களை சம நிலைப்படுத்தி மூச்சுக்குழல் பாதை மற்றும் நுரையீரலைச் சீராக்குகிறது.. பேசில் எண்ணெயாகப் பயன் படுத்தும் போது மிகவும் உயர்ந்த ANTIOXIDANTS கப் பயன்படுகிறது. இது புற்று நோயின் போது உடம்பின் தோலில் உள்ள செல்கள் இறுதியாக அழிவிற்குப் போவதைத் தடுத்துப் புது செல்களை உருவாக்க வல்லது. பேசியல் நமது உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது. தற்கால விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் இந்த “ANTIOXDANT” ஆற்றல் உடல் ஆரோக்கியத்தில் உடலின் சக்தி ஆற்றல்களைத் தூண்டும் ஊன்று கோலாக (a great health boost for our immune systems) உள்ளதாக அறிந்துள்ளனர். இலைகள் காயங்களைக் குணப்படுத்தும். வைரஸ் காச்சில், புளு காச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

பேசில் ஞாபக சக்தியை கூர்மையாக்குகிறது. நரம்பு மண்டலத்திற்கு டானிக்காகச் செயல்படுகிறது. நுரையீரல் குழாயில் ஏற்படும் 'PHLEGM' என்ற கோழையை சுத்தம் செய்கிறது. இலைகள் வயிற்றைக் குணமாக்கும். வேர்வையை அதிகரித்து மரத்துப் போவதை குணமாக்கும். பேசில் விதை மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் அதிகப்படியான கோழை படிமானங்களை அகற்றும் தன்மையுடையது. (The seeds can be used to rid of the body of excess mucus.)

பேசில் இலை மலேரியா போன்ற காச்சலைக் குணப்படுத்தும். இதன் இலையைக் கொதிக்கும் நீரில் இட்டு ஒரு லிட்டர் கால் லிட்டராகச் சுண்டும் வரை விட்டு அதில் ஏலக்காயைப் போட்டு பாலும் சர்கரையும் சேர்த்துக் குடிக்கக் கொடுத்தால் குணமாகும். சுத்தமான நீரில் பேசில் இலையை ஊர வைத்து அதன் நீரை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தை களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சப்பக் கொடுத்தால் குழந்தைகளின் காச்சல் குணமாகும்.

பேசில் இருமல், ஆஸ்த்துமா மற்றும் நுரையீரல் அடைப்பையும் குணப்படுத்தும். இதன் இலையை வாயில் போட்டு மென்று தின்றால் குளிர் மற்றும் புளு காச்சல் அறிகுறியைப் போக்கும்.

பேசில் இலையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆரிய பின் அந்த நீரில் வாயில் ஊற்றி கொப்பளித்தால் டானிக் போன்று தொண்டைப் புண்ணை குணமாக்கம்.

பேசில் இலையுடன் தேனும் இஞ்ஜியும் கலந்து கொதிக்க வைத்து ஒரு லிட்டர் கால் லிட்டர் ஆகும் வரை சுண்ட வைத்து அது குளிர்ந்த பின் குடித்தால் ஆஸ்த்துமா, மார்ச்சளி, இருமல், குளிர் மற்றும் இன்புளியன்சா குணமாகும். பேசில் இலையை கிராம்பு மற்றும் கடல் உப்புடன் கலந்து மேல் சொன்னவாரு கொதிக்க வைத்து இரக்கி இன்புளியன்சா வந்தவர்கள் குடித்தால் விரைவில் குணமாகும்.

பேசில் இலைச்சாற்றுடன் தேன் கலந்த்து தினமும் ஆறு மாத காலம் சாப்பிட்டால் கிட்னியில் உள்ள கல் கரைந்து மூத்திரத் தாரை வழியாக வெளியேறி குணமடையும்.

பேசில் இருதய நோய் உள்ளவர்களைக் குணப்படுத்தும். கொழுப்புச் சத்தைக் குறைக்கும்

பேசில் இலைச்சாறு கீழ்கண்ட வியாதிகளை குணமடையச் செய்கிறது. குளிர், இருமல், காச்சல், வயிற்றுப்போக்கு, மற்றும் வாந்தி எடுத்தால் போன்றவை, சின்னம்மை வந்தவர்களின் புண்ணை பேசில் இலைச் சாற்றுடன் குங்கும்ப்பூ கலந்து உட்கொண்டால் விரைவில் தழும்புகள் குணமடையும்.

ஒரு நாளைக்கு 12 பேசில் இலையை மென்று இரு வெளை  சாப்பிட்டால் மன அழுத்தத்தைக் குறைக்கும். இரத்தத்தைச் சுத்தப் படுத்தி மற்ற நோய்கள் வராமல் தடுக்க உதவியாக இருக்கும்.
தினமும் இரு வேளை இந்த இலையை மென்று சுவைத்தால் வாய்ப்புண் குணமாகும்.

பேசில் இலைச்சாறு சில மணி நேரம் உட்கொண்டால்  சக்தி கிடைக்கும். வீக்கம், நமச்சல் வலி உள்ள இடத்தின் மீது இதன் சாற்றைத் தேய்த்தால் குணமடையும். பேசில் வேரின் பசையை பூச்சிக் கடிக்கும், அட்டைக் கடிக்கும் போட்டால் குணமாகும்.

பேசில் இலையை அரைத்து அதனுடன் சந்தனம் சேர்த்து தலை நெற்றியில் பத்துப் போட்டால் தலைவலி குணமடையும், மேலும் உடல் குழுமையாக இருக்கும்.

பேசில் இலைச்சாறு மாலைக்கண், மற்றும் கண் நோயிக்குச் சிறந்தது. இரவு படுக்கப் போகும் முன்பு ஒவ்வொரு கண்ணிலும் இரு சொட்டு பேசில் இலைச்சாறு தினமும் விட்டால் குணமடையும்..

பேசில் இலைச்சாற்றை வண்டுகடி உள்ள இடத்தில் தேய்த்தால் குணமடையும். மேலும் தோல் வியாதிகள் குணமடையும்.  வெண்புள்ளி (LEUCODERMA) நோய் உள்ளவர்கள் அதன் மீது தேய்த்தால் குணம் காண்பதாக இயற்கை மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

பேசில் இலையை வெய்யிலில் காயவைத்து, அதை நன்கு பொடி செய்து பல் பொடியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொடியுடன் கடுகெண்ணெய் கலந்து நல்ல பசைபோல் உண்டாக்கி மூலிகை பேஸ்டாகப் பல் துலக்கலாம். இவ்வாரெல்லாம் செய்யும் போது வாய் துர்நாற்றம் போகும். மற்றும் ஈறுகள் , (treat pyorrhea) பலமடையும், பல் சம்பந்தப் பட்ட நோய்கள் வராமல் பாது காத்து உடல் நலமுடன் இருக்க துணையாக இருக்கும்.

(பின் குறிப்பு :- இந்த இலை தற்போது கோவையில் கிடைக்கிறது. பசுமைக் குடிலில் ஆர்கானிக் முறைப்படி வளர்க்கிறார். அவர் பெயர் வெங்கடேசன் கை பேசி எண்-9843081698 & 7598262973 மெயில் venkatorganic@gmail.com )
BASIL: பூவுடன்.

Different varieties- sent by Eswarmoorthi USA.

பேசில் பசுமை குடிலில்.


பசுமைக்குடில் வெளித்தோற்றம்.







6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்வை சேமித்து வைத்துக் கொண்டேன்... நன்றி ஐயா...

kuppusamy சொன்னது…

நன்றி தனபால். பேசில் சரியான தமிழ் பெயர் தெறியவில்லை.முயற்சி செய்து பாருங்கள்.

வே.நடனசபாபதி சொன்னது…

தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம்(http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_8.html) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

kuppusamy சொன்னது…

மிக்க நன்றி அய்யா, பதிவுகள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதே என் அவா.

பெயரில்லா சொன்னது…

Pretty nice post. I just stumbled upon your blog and wanted to say that
I have truly enjoyed browsing your blog posts. In any case
I will be subscribing to your rss feed and I
hope you write again very soon!

My page - garciniacambogia.eklablog.com

பெயரில்லா சொன்னது…

A contemplation sooner than researchers from the University of Heidelberg in Germany may helper people with pill viagra sample pack swallowing difficulties. They insinuate two techniques that can keep from people cialis over the counter in usa refurbish their capacity to stimulate physic down.