சனி, 26 செப்டம்பர், 2009

ஆற்றுத்தும்மட்டி.




1. மூலிகையின் பெயர் :-ஆற்றுத்தும்மட்டி.

2. தாவரப்பெயர் :- CITRULLUS COLOCYNTHES.

3. தாவரக்குடும்பம் :- CUCURBTACEAE.

4. வகைகள் :- பெரிய தும்மட்டி, சிறு தும்மட்டி என இரு
வகைப்படும்.

5வேறு பெயர்கள் -: கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி
'Bitter Apple' என்றும் சொல்வர்.

6. பயன்தரும் பாகங்கள்- இலை, காய், வேர் ஆகியவை
மருத்துவப் பயனுடையவை.

7. வளரியல்பு :- ஆற்றுத்தும்மட்டியின் தாயகம்
மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. 1887 ல் துருக்கி,
Nubia and Jrieste ல் இதைக்கண்டு பிடித்தார்கள்.
ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம்
காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான
இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட
இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப்
படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளை
யுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து
போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை
வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்
தன்மை அதிலம் இருக்கும். விதைகள் மூலம்
இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப்பயன்கள் :- சமூலம் நுண்புழு கொல்லும்.
நஞ்சு முறிக்கும். காய் சிறு நீர், மலம் பெருக்கும்.

புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடஙுகளில் காயை
நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.

பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்
புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக
உலர்த்திப் பொடித்து சமனெடை கலந்து அரைத்
தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள
அனைத்து நஞ்சுகளும் முறியும்.

தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து
விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி
விடும்.

பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்
பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய்,
வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து
அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல
வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம்,
திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம்,
சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சன்ன
லவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப்
போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத்
தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும்
2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு)
4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள்
ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு,
இடுப்புவலி, வாயு, ருதுச்சூலை முதலியவை
தீரும்.

துமட்டிக்காய், எலுமிச்சம்பழம், வெள்ளை
வெங்காயம், நொச்சி, இஞ்சி இவற்றின்
சாறுவகைக்கு 1 லிட்டர் கலந்து சிறு தீயில்
காய்ச்சி 1 லிட்டராக வற்றி வரும் போது
இறக்கி ஆறவைத்துக் கல்வத்திலிட்டு ரசம்
லிங்கம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம்,
வெங்காயம், கடுகு, மஞ்சள், வெந்தயம்,
மிளகு, காந்தம், நேர்வாளம் வகைக்கு
10 கிராம் பொடித்துச் சேர்த்து மெழுகுப்
பதமாய் அரைத்து தூதுளங்காய் அளவாக
வெல்லத்தில் பொதித்து10 நாள்கள் காலை
யில் மட்டும் கொடுத்து வர வயிற்று நோய்கள்
குன்மம், வாயு தீரும்.


--------------------------------------------(தொடரும்)

2 கருத்துகள்:

விஜய் சொன்னது…

ஐயா, நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து உள்ளேன். தங்களின் அறிய சேவையை பின்தொடர உள்ளேன். ஆசி வழங்குங்கள்.

நன்றி .

agasool.blogspot.com

kuppusamy சொன்னது…

என் வாழ்த்துக்கள். என் தா(வரங்கள்) வலைப்பதிவில் இணைப்புக் கொடுத்துள்ளேன். நன்றி வளர்க உம் வலைப்பதிவு.