வெள்ளி, 11 ஏப்ரல், 2008

கொன்றை.


கொன்றை.


1) மூலிகையின் பெயர் -கொன்றை.

2) தாவரப்பெயர் -: CASSIA FISTULA.


3) தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.


4) வகைகள் - புலிநகக்கொன்றை, மயில்க்கொன்றை, சரக்கொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, சிறுகொன்றை, மந்தாரக் கொன்றை மற்றும் முட்கொன்றை,


5) வேறு பெயர்கள்- பெருங்கொன்றை,சிறுகொன்றை.


6) பயன் தரும் பாகங்கள் -: பட்டை, வேர், பூ, மற்றும் காய்.


7) வளரியல்பு - : கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப் படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும் ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு சிகப்பு நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவரம்பூவின் வடிவத்திலிருக்கும்.இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பூவின் நடுவில் 5-6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உரிளைவடிவக் காய்களையும், உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.


மருத்துவப் பயன்கள்- மரம், நோய்நீக்கி உடல் தேற்றும். காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.


வேர்ப் பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் விட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள், கணுச்சூலை தீரும். ஒரு முறை மலம் கழியுமாறு அளவை திட்டப் படுத்திக் கொள்ள வேண்டும்.


10 கிரைம் சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிட வயிற்ற்றுப் புழிக்கள் கழிந்து நோயகலும். நீடித்துச் சாபிட மது மேகம் தீரும்.


பூவை வதக்கித்துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.
காயின் மேலுள்ள ஓட்டைப் பொடித்துக் குங்கமப்பூ சர்க்கரை சமன் கலந்து பன்னீரில் அரைத்து பெரிய பட்டாணி அளவாய் மாத்திரை செய்து உலர்த்திக் கொண்டு மகப் பேற்றின் போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் 10 நிமிடத்திற்கு 1 மாத்திரை கொடுக்க இறந்த குழந்தையை வெளித்தள்ளும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவுப் பாகங்களில் பயன்படுத்த மலர்ச்சிக்கல் அறும்.


கொன்றைப் புளியை நீரில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட கணுச் சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.


சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலக்கி உண்டு வந்தால் வெட்டை, காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.


கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மி.லி. கொடுக்க வயிற்றிலுள்ள நுண்புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.
பூவை எலுமிச்சைச்சாறு விட்டரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்கச் சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.


கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்த மான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், மேக கிரணம் இவைகள் படிப்படியாக மறைந்து விடும்.


கொன்றை மரத்தின் பட்டையை நறுக்கி, அதில் ஒரு கைப் படியளவும், தூது வேளைக் கொடியின் இலை,பூ, காய்,வேர் இவைகளில் வகைக்கு 5 கிராம் வீதமும் எடுத்து அதையும் பொடியாக நறுக்கி, வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு. மொச்சைக் கொட்டையளவு தூளைஎடுத்து, ஒரு டம்ளர் காச்சிய பசும் பாலில் போட்டுக் கலந்து, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் படிப்படியாக் குறைந்து அறவே நீங்கி விடும்.


கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால் , காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.
-----------------------------(மூலிகை தொடரும்)

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

சீந்தில் கொடி.


சீந்தில் கொடி.


1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.


2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA.


3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.


4) வேறு பெயர்கள்- அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).


5) பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர்.


6) வளரியல்பு - : சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது. இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும். இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும்.பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.


7) மருத்துவப்பயன்கள் -: முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.


சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும். முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.


சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.

சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.


முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.
----------------------------------------------------------(மூலிகை தொடரும்)
வள்ளலார் பிரகாஷ் முகநூலிலல் கூறியது--பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர்.இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமபுறங்களில் இதை செய்கின்றனர்.அதனால் தான் இதற்கு சாகா மூலி என்ற பெயர் வந்துள்ளது. ( 2-6-2015.)

4-6-2015-
பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும். வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. ஆலமரத்தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகின்றன.
தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும்.

வியாழன், 27 மார்ச், 2008

கார்போகரிசி


கார்போகரிசி

1) மூலிகையின் பெயர் -: கார்போகரிசி

2) தாவரப்பெயர் -: PSORALEA CORYLIFOLIA.

3) தாவரக்குடும்பம் -: LEGUMINACEAE,
(PAPILLIONACEAE,
& FABACEAE)

4) முக்கிய வேதியப் பொருட்கள் -: சொரோலின்
மற்றும்ஐசோசொரோலின்.(PSORALEN)

.5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பழம்,விதை,
மற்றும் வேர் முதலியன.


6) வளரியல்பு - : கார்போகரிசி ஒரு செடி வகை
யைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் சைனாவிலும் இந்தி
யாவில் அதிகமாகக் காணப்பட்டது இது சுமார்
3 அடி உயரம் வரை வளரும். இது ஊட்டச்சத்
துள்ள மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும்.
இலைகள் அகலமாக இருக்கும், கொத்தாக
இருக்கும். ஒரு கிளையில் 8-12 பூக்கள் பூக்கும்.
அவை காயகி விதைகள் உண்டாகும். சுமார் 7-8
மாதங்களில் முதிர்ந்து விடும். இதன் விதையிலிருந்து
எண்ணெய் எடுப்பார்கள்(ரோகன் பாப்சி) இதன்
இலை,பழம், விதை, வேர் யாவும் மருத்துவப்
பயனுடையவை. இதை வணிக ரீதியாகப் பயிர்
செய்வார்கள். ஒரு எக்டருக்கு 7 கிலோ விதை
களை 2 அடிக்கு 2 அடி என்ற இடைவெளியில்
பண்படுத்திய நிலத்தில் நடுவார்கள். தண்ணீர்
விட்டு பயிர் பாதுகாப்புச் செய்து 7-8 மாதங்களில்
முதிர்ந்த பழுத்த சற்று பழுப்பக் கலந்த கருப்பாக
மாறி ஒரு வகை வாடை கண்ட பொழுது அறுவடை
செய்ய வேண்டும். பின் விதைகளை நிழலில்
உலர்த்த வேண்டும். ஒரு எக்டருக்கு சுமார்
2000 கிலோ காய்ந்த விதைகள் கிடைக்கும்.
இதிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். வருட
செலவு ரூ.30,000 வரவு ரூ.75000 வருமானம்
45,000 கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள்- ஆதிகாலத்தில் சைனாவிலும்,
இந்தியாவிலும் இதன் எண்ணெயை உடல் வெளி
பாகத்தில் தேய்த்து தோல் வியாதிகளைப் போக்
கினர் மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியூட்ட இதை
உபயோகித்தார்கள். இதன் வேர் பல் வியாதி
களுக்குப் பயன் படும். இலை அமீபாவால் வரும்
வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும்
வல்லது. இதன் பழம் வாந்தி, மூலம், இரத்த
சோகை, சுவாச சம்பந்தமான நோய்கள் குணப்
படுத்தும். முடிவளரவும் பயன் படுத்தப் பட்டது.
வயிற்று வலி, முதுகு வலி, கிட்னிகள் சம்பந்தப்
பட்ட நோய்களையும் குணப் படுத்தும். இது தாது
விருத்தியுண்டாக்கி உடல் வன்மை பெறப் பயன்
படும்.

இதன்விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை
இருதய சம்பந்தமான நோய்களுக்கும்,யானைக்கால்
வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்ட
சம்பந்தமான வியாதியை சீர் செய்யவும், தோல்
வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண்
குஷ்டம், குஷ்டம், "AIDS" க்கும் நல்ல மருந்தாகப்
பயன்படுகிறது.

கார்போகரிசியால் கடுவன், விரணம், பயங்கர
மான சர்ப்பகீட தாவர விஷங்கள், வாதசிலேத்
தும தொந்தம், தினவு, யானைச் சொறி, கிரந்தி
ஆகிய இவைகள் நீங்கும். பித்தம் அதிகரிக்கும்
என்பர்.

இதன் சூரணத்தை 5 - 10 குன்று எடை சர்க்
கரையுடன் கூட்டிக் கொடுக்கலாம். இது தீபத்தை
உண்டாக்கும். மலத்தைப் போக்கும். தோல்
சம்பந்தமான பல வியாதிகளைக் குணப் படுத்தும்.
விஷேசமாக இந்த சரக்கை வாசனைத் திரவியங்
களிலும் உபயோகப் படுத்துவதுண்டு.

சந்தனாதிச் சூரணம்-- கார்போக அரிசி, நீரடி
முத்து, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு
சந்தனத்தூள், அகில் கட்டை, தேவதாரு, கற்
பாசி, வெட்டிவேர், குருவி வேர், ஆக பத்து
சரக்குகளையும் வகைக்குப் பலம் ஒன்றாக
இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு
ஸ்நானம் செய்யும் போது இச்சூரணத்தை நீர்
விட்டுக் குழைத்துத் தேகமெங்கும் பூசித்
தேய்த்து 5 - 10 நிமிடம் வரை ஊற விட்டுப்
பின் நன்றாய்த் தேய்த்துக் குளிக்கவும். இப்படி
ஒரு மாதம் செய்ய சொறி, சிரங்கு, நமைச்சல்,
படை, தவளைச் சொறி, கருமேகம், இரத்தக்
கொதிப்பனாலுண்டாகும் பல நிற வடுக்கள்
யாவும் போம்.

-----------------------------(மூலிகை தொடரும்)