சனி, 30 ஜூன், 2012

நறுவல்லி



நறுவல்லி மரம்.

நறுவல்லி

மூலிகையின் பெயர் :- நறுவல்லி.

தாவரப்பெயர் :- CORDIA DOCHOTOMA.

 .தாவரக்குடும்பம் :- BORAGINACEAE.

பயன்தரும் பாகங்கள் :- பழம், பட்டை, பிஞ்சு, இலை  மேலும் பருப்பு (விதை) முதலியனவாகும்.

வளரியல்பு :- நறுவல்லி ஒரு பூ பூக்கும் ஒரு நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. இந்த மரத்தை நறுவிலி என்றும் அழைப்பர். அடிமரம் உயரம் அற்றதாக வளைந்து திருகுடையதாக கரணைகள் கொண்டிருக்கும். இது இந்தியா, இண்டோமலாயா, வட ஆஸ்திலேலியா,  மேற்கு மலநேசியா, சைனா, ஜப்பான், தாய்வான், பாக்கீஸ்தான், இலங்கை, கம்போடியா, லாஸ், பர்மா, தாய்லேண்ட், வியட்னாம், இந்தோனேசியா, மலேயா, நியுஜினியா, ஆஸ்திரேலியா,  ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மேற்குத் தொடர்ச்சி மலை, மாய்மர் காடுகள் ஆகிய இடங்களில் காணப்படும். ஆங்கிலத்தில் பொதுவான பெயர்கள்- Glue berry, Pink pearl, Bird lime tree, Indian cherry, ஆகியவை. இது வளமான மண்ணில் நன்கு வளரும். சரள் மண்ணில் வளராது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது சுமார் 40 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் மென்னையாக இருக்கும். பட்டையை நீக்கி விட்டு இதில் ஈருகோலி மற்றும் பேன் சீப்புச் செய்வார்கள். மரத்தின் விட்டம்  25-50 செ.மீ. இருக்கும். மரம் சிறிது திருகிச் செல்லும். 1500 அடி கடல் மட்டத்திற்கு மேல் வளராது. மழையளவு 250-300 எம்.எம் வரை தேவைப்படும். ஓடை ஓரங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் ஓவல் வடிவத்தில் இருக்கும், முக்கோண வடிவிலான தனித்த மாற்றடுக்கில் அமைந்த இலைகள் காம்படி அகன்றும் முனை சிறுத்தும் காணப்படும். இலைகளை லார்வா சாப்பிடும். மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவர். பர்மாவில் இலைக்காக வளர்ப்பார்கள். கொனைகளின் இறுதியில் வெள்ளை நிறமுடைய சிறிய மலர்கள் கொத்தாகப் பூத்திருக்கம். 2 செ.மீ. குறுக்களவுள்ள முட்டை வடிவிலான சதைப்பற்றுள்ள காய்கள் கொத்தாகக் காய்த்துப் பழமாகும் போது கருப்பு நிறமுடையனவாக மாறும்.  இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் அகலம் 2-3 செ.மீ. நீளம் சுமார் 10 செ.மீ. இருக்கும். பூக்கள் சிறிதாகவும், வெண்மை நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். பூ 8 எம்.எம். நீளத்தில் இருக்கும். பூக்கள் தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். இதன் பிஞ்சை ஊறுகாய் போடப் பயன்படுத்துவார்கள். இதன் பழங்கள் 10-13 எம். எம். நீளம் இருக்கும். பழங்கள் கத்தரிப்பூ நிறத்திலும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் பழம் சாப்பிட வழுவழுப்பாக இருக்கும். விதை 6 எம்.எம். நீளம் கொண்டவை. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பறவைகளால் விதைகள் பரவும்..

மருத்துவப்பயன்கள் :– நறுவல்லியின் தன்மை சூடும், குழுமையும் ஆகும். இதன் முக்கிய பயன் சுத்த இரத்தம் உண்டாக்கும். வண்டல் சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கும். கபத்தை அறுக்கும். தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். மருந்து களினால் உணைடாகும் வேகத்தைத் தணிக்கும். பேரீச்சம் பழத்துடன் அரைத்துப் பூச பருக்களை உடைக்கும். நறுவல்லியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவைகள், குழுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவையாகும். நறுவல்லியின் பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் நிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.  இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தைக் கட்டவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது இரத்திலான அசுத்தத்தை நீக்குகின்றது. அஜீரணத்தைப் போக்குவதோடு காச்சலையும் தணிக்கின்றது. சீதபேதி, உடல் எரிச்சல், தொழுநோய், சொறிசிரங்கு ஆகியவற்றையும் குணமாக்கும். இதன் இலை காம உணர்வை மேலோங்கச் செய்யும் இயல்புடையது. வெட்டை நோய், கண்ணிலான வலி ஆகியவற்றைக் குணமாக்கும்.  இதன் பழம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது.  காம உணர்வைத் தூண்டுவதோடு, சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும். தொழுநோய், தோல்வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிறைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல்,  சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்ச்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இப்பழம் பயன்படுகிறது. 

‘நறுவிலியி லைக்கு இரைப்பு நாசம் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் – நறுவிலியின்
தன்பழம் இரத்தபிஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்குமிசை’’
 

நறுவல்லி பழங்கள்.



--------------------------------------------(தொடரும்)
 
முத்துக்குமார் அம்பாசமுத்திரம் அவர்கள் வெளியிட்டதின் நகல். மக்கள் பயன்பெற. மிக்க நன்றி.
 
முன்னோர் வழங்கிய மூலிகை: நறுவல்லி
கூட்டுவதுங் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதுங் காட்டுவதும்
காட்டி மறைப்பதுவுங் கண்ணுதலோன்
முன்னமைத்த ஏட்டினி படியென் றிரு.’’
நாம் அன்றாடம் பார்க்கும் பல தாவரங்கள் நம்மை வாழவைக்கும் மூலிகையாக இருந்து வருகிறது. உணவே மருந்து... மருந்தே உணவு... என்பதே நமது மருத்துவம். எந்த நோயாக இருந்தாலும் அதை உணவை கொண்டே தீர்க்கும் வகையில் நமது மருத்துவ முறையை முன்னோர்கள் அமைத்தார்கள். இந்தியா, இலங்கை, வடஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தானாக வளரும் மரம் நறுவல்லி. நமது நாட்டில் நறுவல்லி, நரிவிழி என்று அழைக்கப்படுகிறது.
எப்பொழுதும் பசுமையாக இருக்கும் மரம். இதன் இலைகள் பளபளப்பான நீள்வட்ட அமைப்பை கொண்டது. பழங்கள் ஆரஞ்சு நிறத்தில் வழுவழுப்பாக இருக்கும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவ பயன்கள் உடையவை. பழங்காலத்தில் சீப்புகள் இந்த மரத்தில்தான் செய்வார்கள். இதன் பழத்தை சுவைக்கும்போது பிசுபிசுப்பு சுவையுடன் இருப்பதால் இதை பாமரமக்கள் மூக்குசளி பழம் என்று அழைப்பார்கள். கரும வினை எனப்படும் நோய்களில் ஒன்றுதான் மூல நோய். இவர்கள் 10 கிராம் கொழுந்து இலைகளை மென்மையாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, இரவு உணவுக்கு பின் சாப்பிட்டுவர எந்த வகை மூலமானாலும் தீரும்.
இளம்பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பருவகாலத்தில் முகத்தில் தோன்றும் பருக்கள் அவர்களின் அழகை கெடுப்பதுடன் வடுக்களையும் ஏற்படத்தி விடும். இவர்கள் இலைசாற்றை முகப் பருவின் மேல் பூசினால் பருக்கட்டிகள் உடைந்து வடுக்கள் இல்லாமல் ஆறும். சிறுவர்கள், பெரியவர்கள் நடந்தால், ஓடினால் மூச்சிரைப்பு ஏற்படும் இவர்கள் இலைகளை நீரிலிட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை இருவேளை 100 மிலியாக காலை மாலை இரண்டு வேளை குடித்து வர மூச்சிரைப்பு தீரும்.
நெஞ்சில் ஏற்படும் சளி, நீர்சுருக்கு எனப்படும் சிறுநீர் பிரச்சனை, குடல் சார்ந்த நோய்கள், நீண்ட நாட் களாக உள்ள மலச்சிக்கல் ஆகியவை இந்த பழம் சாப்பிடுவதால் தீரும். ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீண்ட கால நோய்களுக்கு ஆங்கில மருந்தை பயன் படுத்தினால் தீரும் என்று அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் அதுவே பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோயை உண்டாக்கும். முக்கியமாக உடலில் தேவையற்ற வெப்பத்தை அதிகரித்து நோயை உண்டாக்கும் இதற்கு நறுவல்லி பழத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட வேகத்தை தணிக்கும்.
நறுவல்லி பட்டை சாற்றில் 50 மிலி அளவு எடுத்து அதே அளவு தேங்காய்பால் கலந்து காலை மாலை குடித்து வந்தால் கடும் வயிற்று வலி தீரும்.
இதன் விதையை பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தோல் நோய்களுக்கு தடவி வர பலன் கிடைக்கும்.சில ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் தளர்வு ஏற்படும். மேலும் அதிகப்படியான சூட்டினால் கோழை உருவாகி மூச்சியிரைப்பு உண்டாகும். இவர்கள் பழத்தை ஊறுகாய் செய்து சாப்பிட இருமல் தீரும். கோழையை அகற்றி ஆண்மையை பெருக்கும்.
சிலர் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் அருகில் நெருங்கி பேசினால் வாய் நாற்றம் தாங்காது. இவர்கள் வேர்பட்டையை சிதைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி அதில் வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம், தொழுநோய், தோல்வியாதிகள், உடல்எரிச்சல், மூச்சிரைப்பு, மூட்டுவலி, மண்ணீரல் வீக்கம், வாய்ப்புண், பல்லாட்டம் நீங்கும். இப்பழம் குளுமை குணம் கொண்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதை மருந்தாக எடுத்து கொள்ளலாம். பழத்தை அளவோடு யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதைத்தான்
நறுவிலி யிலைக்கிரைப்பு நாசமவ் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும்- நறுவலியின்
தன்பழமி ரத்தபித்தஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்குமிசை’’
என்கின்றது அகத்தியர் குணவாகடம். இனி நரிவல்லி பழத்தை பார்த்தால் மூக்குசளி பழம் என முகத்தை சுளிக்காமல், முன்னோர்கள் வழங்கிய அமுத பழம் என்பதை உணர்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி உடல் நலத்தை காப்போம்.
 
நன்றியுடன் தொடரும். 26-12-2014.
 

புதன், 30 மே, 2012

விளா.

இராசன்-சின்னாம்பதி.



விளா மரத்தில் காய்கள்.

விளா.

மூலிகையின் பெயர்  :- விளா.

தாவரப்பெயர் :- FERONIA ELEPHANTUM.

தாவரக்குடும்பம் :- RUTACEAE.

வகைகள் :- தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும், இங்கு விளக்குவது பெரிய மர வகுப்பைச் சார்ந்த பெருவிளா மரம்.

வேறு பெயர்கள் :– கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை.

பயன் தரும் பாகங்கள் :– கொழுந்து, இலை, காய், பட்டை, ஓடு மற்றும் பிசின். ஆகியவை.

வளரியல்பு :– விளாமரம் தாயகம் இந்தியா பின் பாக்கீஸ்தான், இலங்கை,தாய்வான், மாயின்மருக்குப்பரவிற்று. இது எங்கும் வளரும். மர வகுப்பைச் சார்ந்தது. இது காடுகளில் அதிகம் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் வளராது. ஆழமான மண்வகையில் நன்கு வளரும். மேலும் வீடுகளிலும், கோயில்களிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.  மூன்று வகைகளில் இது பெரிய மர வகுப்பைச் சார்ந்து பெரு விளா மரம். இந்த   கருமைநிறமாக  இருப்பதால் கருவிளாம் என்று சொல்லப்படுகிறது. விளாமரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலைகள்.   இலைகள் 5-7 வரை இருக்கும், இது 25-35 மில்லி இருக்கும். தனி இலை 10 மில்லி 20 மில்லி அகலம் இருக்கும். இதன் இலைகள் நல்ல மணத்தைக் கொண்டது. இலை நீள் வட்ட வடிவமாக இருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாக இருக்கும். இதன் விட்டம் 5-9 செ.மீ. இருக்கும். பழத்தின் ஓடு கெட்டியாக இருக்கும். உள் சதைமரக்கலரில் இருக்கும். விதைகள் வெள்ளையாக இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும். இது முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். விளாமரம் வளர்ந்த 5 வது வருடத்தில் காய் காய்க்கும்.  இதை எந்த பூச்சியும் தாக்காது. விளா ஓடு கைவினைப் பொருள்கள் செய்யப் பயன் படுத்துகிறார்கள். விளா விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

விசாக நட்சத்திரத்தின் விருட்ச மரம் விளா. விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களால் குழந்தை பாக்கியமின்மை, பிறக்கின்ற குழந்தை ஊனமாகப்பிறத்தல், வாயுத்தொல்லைகள், நோய்த்தொற்று, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, சர்கரை நோய், மனப்பதற்றம், ஈறு மற்றும்
கர்பப்பைக் கோளாருகள் ஆகியவை உண்டாகின்றன. இதனை விசாக நட்சத்திர தோசம் என்பர். விளாமரத்தின் நிழலில் இளைப்பாறினால் இந்த தோசத்திலிருந்து விடுபடலாம்.

மருத்துவப் பயன்கள் :– விளா சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொது குணமாகும். பழம் கோழையகற்றிப் பசியுண்டாக்கும். பழ ஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத்துவளச் செய்யும். துவர்ப்புச் சுவையோடு வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றி, உடலுக்குக் கிளிர்ச்சியைத் தந்து, புண்களை ஆற்றக் கூடிய செய்கை உடையது. நாவறட்சி, விக்கல், வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது.

விளாக் கொழுந்து புன்னைக் காயளவு அரைத்துப் பால், கற்கண்டு கலந்து சாப்பிடப் பசியின்மை, கப இருமல், கபக்காசம், இளைப்பு,  பித்தக்கணச்சூடு தீரும்.

இலைக் குடிநீர் பித்த சுரம், இருமல், தேக வறட்சி தணிக்கும்.

இதன் பழம் துவர்ப்பும், புளிப்பும் உடையது. நறுமணமுடையது. சாப்பிட சுவையாக இருக்கும். சர்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிட அமிழ்தம் போலிருக்கும். பழம் பசியைத் தூண்டும், குருதியை உண்டாக்கும், வாந்தியை நிறுத்தும். மலத்தைக் கட்டும். குடலுக்கும் உடலுக்கும் பலத்தைக் கொடுக்கும். விந்தை உற்பத்தி செய்யும். பித்தக் கோளாறுகள் யாவும் நீங்கும்.

விளாம்பழத்தைச் சுட்டு அதன் சதையை எடுத்து மிளகாய், வெங்காயம், உப்பு, கொத்தமல்லி, துவரம்பருப்பு வறுத்து சேர்த்துத் துவையல் அரைத்து உணவில் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பித்தம் தணிக்கும், பித்தத்தினால் வரும் தலை சுற்று நீங்கும்.

இதன் தளிரிலையை அரைத்து 10 கிராம் மோரில் மூன்று வேளை சாப்பிட வயிற்றோட்டம் நிற்கும். மூன்று நாள் இரு வேளையும் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

விளாந்தளிர், நாரத்தையின் தளிர், கருவேப்பிலை, எலுமிச்சையின் இலை, சம அளவு உலர்த்திய பொடி 100 கிராம், மிளகு 10 கிராம், வெந்தயம் 10 கிராம் கடலைப் பருப்பு வறுத்து பொடி 100 கிராம்  உப்பு 20 கிராம், சேர்த்துக் கலந்து பொடி உணவில், சேர்த்துப் சாப்பிட பித்தம் குணமாகும், பசி எடுக்கும், வாந்தி குணமாகும். உடலுக்கும் ஊட்டமுடையதாகும்.

குட்டி விளாம் என்பது நிலத்தில் படர்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை மருத்துவக்  . சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம். சளிக்கு துளசியுடன் சேர்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும், அரிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். குணமாகும்.  தோல் மென்மையாக இருக்கும். மிளகு ரசத்தில் இதன் இலையை கறிவேப்பிலையைப் போல் போட்டால் மணமாக இருக்கும்.

விளாங்காய் சதையை சிறிது வேக விட்டுக் கொடுக்கப் பேதி, சீதப் பேதி தீரும்.

பழத்தை ஓட்டுடன் அரைத்து விழுங்க மருந்து வீறு தணியும்.

விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள்உறுப்பு ரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும். உப்பில்லாப் பத்தியம் தேவை.

இலை, பூ, பழம், பட்டை, வேர் ஆகியவற்றைச் சமனளவு உலர்த்திப் பொடித்து வேளைக்கு 5 கிராமாக சிறிது சர்கரையுடன் உண்டு வரப் பித்த மிகுதி, பசியின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் ஆகியவை தீரும்.

விளாமரத்தின் காயைக் கொண்டு வந்து அதை முழு அளவில் ஒரு சட்டியில் போட்டு, காய் நனையும் அளவிற்குத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி உடைத்து உள்ளேயுள்ள சதையை மட்டும் எடுத்து, அத்துடன் அரை டம்ளர் அளவு தயிர் சேர்த்துக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் சீதபேதி, வயிற்றுப் போக்கு பூரணமாக குணமாகும்.

விளாங்காயை மேலே சொன்னபடி வேக வைத்து அதன் சதையுடன் உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான சகல கோளாறுகளும் நீங்கி விடும்.

விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து காலையில் மட்டும் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்ணாசை வெறுத்து விடும்.

ஒரு கைப்பிடி அளவு விளா இலை எடுத்து முறைப்படி குடிநீரிட்டு அருந்தி வர காச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.

வேர்க்குரு, கோடைக் கொப்புளங்கள் முதலிய வற்றிக்கு விளா இலைக் கொழுந்தை சாறு பிழிந்து பூசிவர குணமாகும்.

விளாங்காய் மற்றும் வில்வக்காய் இவைகளின் சதைப் பகுதியை எடுத்து அதை கஞ்சியாக க் காச்சிக் குடித்து வந்தால் மூல நோய் தொல்லை குறையும்.

விளாம்பழத்தின் ஓட்டைப் பிளந்து பழத்தை மட்டும் உட்கொண்டு வர வாய் நீர் ஊறல் வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்களும் நீங்கி, நன்கு பசி உண்டாகும்.

விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலி சூரணம் தேவையான அளவு கலந்து உண்ண விக்கல், மேல் மூச்சு வாங்கல் நிற்கும்.

விளாமரப்பட்டை 488 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு இடித்து, 500 மிலி நீர் விட்டு நன்கு காச்சி, தினம் இரு வேளை அருந்தி வர பித்த வாந்தி, குமட்டல், புகையிலை நஞெசு நீங்கும்.

நீரழிவு நோய்க்கு ஆவாரை வேர், விளா வேர், பூலாவேர், இலவங்கம், காட்டு மல்லி வேர் இவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் இட்டு நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர குணம் தெரியும்.


விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அடக்கி அதன் ரசத்தை மட்டும் விழ்ங்கி வந்தால் வறட்டிருமல் நீங்கும்.

நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.

சித்த மருத்துவத்தில் விளாம்பழத்தை பல மருந்துகள் செய்யப் பயன்படுத்திகிறார்கள்.

விளாம் பழத்தை யானை விழுங்கிய பின் அந்த ஓடு அதன் கழிவு வெளியே வரும்போது எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளே சாம்பலாக மாறியுள்ளது என்று சின்னாம்பதி இராசன் என்பவர் அனுபவத்தில் கூறினார். படங்கள் அங்கு எடுத்தது தான்.
விளாகாய் உடைத்தது.

விளாம்பழம் உடைத்து.

விளாமரம்.

விளாம்பழம்.





---------------------------------------------------------(தொடரும்)

complement for your blog
Inbox
x

Kannan Mariappan
Sep 12 (4 days ago)

to me
Dear Kuppusamy Ayya,
I come across your blog when searching for vizham pazham benefits . but i found more then what i looking for, lot of information for indian herbal plants.
thanks for your effort to collect and put to gather in one place.
your effort is inspiration for young people to appreciate and grow our traditional herbal and grains
Thank you

Regards 

மிக்க நன்றி கண்ணன் மாரியப்பன் அவர்களே. என் பணி தொடரும்.
------------------------------------------------------அன்புள்ள, குப்புசாமி.க.பொ.
16-9-2013.



திங்கள், 30 ஏப்ரல், 2012

எள்ளுச்செடி




எள்ளுச்செடி

 மூலிகையின் பெயர் :- எள்ளுச்செடி.

தாவரப்பெயர் :- SESAMUM INDICUM.

.தாவரக்குடும்பம் :- PEDALIACEAE.

பயன்தரும் பாகங்கள் :- விதை, பூ, எண்ணெய் முதலியன.

வேதியல் சத்து :- PROTEINS – GLOBULIN.

வளரியல்பு :- எள்ளுச்செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு செடி. இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா. பின் உலகெங்கிலும் பரவிற்று. ஆதிகாலத்திலிருந்து எண்ணெய் வித்துக்களில் எள்ளின் விதைதான் முதலில் தோன்றியதாகச் சொல்வர். 5000 ஆண்டுகளுக்கு முந்தியது. சைனா மற்றும் இந்தியா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் அதிகம் செய்தது. சைனா, தென்கிழக்கு ஆசியா, அமரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.

எள்ளுச்செடி சுமார் 50 முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. ஆப்பிரக்காவில்  6 அடி உயரங்கூட வளரும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இது 4 – 14 செ.மீ. நீளம் இருக்கும். இது தும்ப இலையை ஒத்திருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும். எள் செடி வெண்மையான பூக்களை விடும். ஆனால் ஆப்பிரிக்காவில் மஞ்சள், நீலம், ஊதா நிறங்களிலும் பூக்கள் விடும். இதன் பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையாலும், மற்றும் தேனீக்கள், பறவைகளாலும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பூக்கள் காயாக வளரும். காய்கள் நீண்டிருக்கும். 2 – 8 செ.மீ.நீளம் இருக்கும்.  ஒரு விதையில் சுமார் 100 விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை சுமார் 20 -40 மில்லிகிராம் எடை இருக்கும். கருப்பாக மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்திலும் எள் இருக்கும். இதை வியாபார நோக்கில் பயிர் செய்பவர்கள் வளமான மண்ணை நன்கு உழுது, உரமிட்டு பாத்திகள் அமைத்து எள்ளை மணலுடன் கலந்து விதைப்பார்கள். அதன் பின் தண்ணீர் விட்டு சில நாட்களில் முழைக்க ஆரம்பிக்கும். பின் 10 நட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாச்சுவார்கள். பின் செடி ஒரு அடி வளர்வதற்குள் கழை எடுப்பார்கள். பின் செடி வளர்ந்து மூன்று அல்லது நான்கு மாதத்தில் காய்கள் முற்றி பழுக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அவைகள் அருவடை செய்து கல் மண் இல்லாத களத்தில் கொண்டு போய் காய்கள் மேல் நோக்கி இருக்கும் படி வைத்து வெய்யிலில் உலர வைப்பார்கள். காய்கள் நன்கு காய்ந்து மேல்முனையிலிருந்து வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை தலைகீளாக உலர்த்தி லேசாகத் தட்டினால் எள் கழத்தில் விள ஆரம்பிக்கும். அவ்வாறு விழுந்ததைச் சேகரித்து சுத்தம் செய்து மூட்டையாகக் கட்டுவார்கள். ஆனால் இது மானாவாரியாகவும் விளையும். தமிழ் நாட்டில் நெல் அருவடைக்குப் பின் எள்ளை விதைத்து எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். எள் விதையை ஆட்டி எண்ணைய் எடுப்பார்கள் அது தான் நல்லெண்ணெய் என்பது.

மருத்துவப்பயன்கள் :- எள் செடியிலிருந்து உண்டாகும் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் நல்ல மருத்துவ குணமுடையது. அதன் செய்கை மலமிளக்கி, உள்ளழலாற்றி, சிறுநீர் பெருக்கி செயலாற்றும். இதன் மருத்துவ குணம் அதிகம் ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்துகள் செய்ய துணை மருந்தாகப் பயன்படுகிறது. இதில் மெகனீசியம்,  காப்பர், கால்சியம் மற்றும் வைட்டமின் B1, E, A போன்றவை உள்ளன. இது கப, பித்த, வாத, மூலநோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், அனிமியா, தோல் நோய்கள் குணப்படுத்த வல்லது.  அந்தக் காலத்தில் ஆண்கள் புதன் கிழமை மற்றும் சனிக்கிழை நாட்களில் இந்த எண்ணெய் தேய்த்து உலரவிட்டுப் பின் குழிப்பார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமை நாழில் இந்த எண்ணெயைத் தலை, உடம்புக்குத் தேய்த்துக் குழிப்பார்கள். சனி நீராடு என்ற பழமொழியும் உண்டு. இதன் நோக்கம் உடல் சூடு குறைக்க வேண்டியும், உடல் மென்பை பெற வேண்டியும் ஆகும். பாபிலோனியாவில் பெண்கள் இந்த எண்ணெயைத் தான் அழகு சாதனமாகவும் உடம்பை மசாஸ் செய்யவும் பயன் படுத்தியுள்ளார்கள். எள்ளில் இனிப்புச்சேர்த்து எள் உருண்டை செய்து ரோமானிய படைவீரர்கள் சக்திக்காகவும் பலத்திற்காகவும் சாப்பிட்டுள்ளார்கள். இந்த எண்ணெய்  இறைவனுக்கு விழக்கு ஏற்றப்பயன் படுத்தியுள்ளார்கள். இறந்தவர்களின் மத சடங்குகளில் எள்ளைப் பயன்படுத்தியுள்ளார்கள். ரொட்டிக்கு மேல் எள்ளை வைப்பார்கள். மேலும் மெழுகுபத்தி, சோப்பு, பெயிண்ட், செண்ட், பூச்சிக் கொல்லி மருந்து செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் சமையலுக்கு இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

கண் எரிச்சல் நீங்க-

கண்ணில் சதா எரிச்சல் இருந்து கொண்டே இருந்தால், தேவையான அளவு எள்ளுப்பூவைக் கொண்டு வந்து, அதை ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இளஞ்சூடாக இருக்கும் போதே, இரவு படுக்கும் முன், அதை இரு கண்களையும் மூடிக் கொண்டு சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்துக்கொண்டு கட்டிக் கொண்டு உரங்கி, காலையில் எழுந்த பின் கட்டை அவிழ்த்து பூக்களை எடுத்து விட்டுக் கண்களைக் கழுவிக் கொள்ளவேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குக் கட்டினால் போதும். கண் எரிச்சல் மாறிவிடும்.

கண் பார்வை தெளிவடைய-

நாற்பது எள்ளுப்பூ, மிளகு ஒன்பது, அரிசித் திப்பிலி இருபது, சம்பங்கி மொக்கு இருபத்தயிந்து இவைகளை வெய்யிலில் போட்டுச் சருகு போல காயவைத்து, உரலில் போட்டு இடித்து, துணியில் சலித்து ஒரு சுத்தமான சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை மிளகளவு தூளைக் கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். மருந்தை கண்களில் போட்டவுடன் எரியும், கண்ணீர் வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும். தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

தலைமுடி பாதுகாப்பு-

ஒரு கைப்பிடியளவு எள்ளுச் செடியின் இலையை எடுத்து அளவான நீரில் 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின் இரக்கி ஆரவைத்து, இலைகளை எடுத்து விட்டு அந்த நீரை தலைக்கு இட்டுத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் உதிர்வதும், இளநரை ஏற்படுவதும் தவிர்க்கலாம்.

மருத்துவர் பாஸ்கர் ஜெயராமன் முகநூலில் எழுதியது-14-1-2016.
'கண்ணோய் வராதிருக்க ரகசிய வித்தை" !!!
எள்ளு செடியிலிருக்கும் இளம் பூவை வாயில்போட்டு பல்லில் படாமல் விழுங்கிவிடவேண்டும், ஒருபூவை விழுங்கினால் ஒருவருடத்திற்கு கண்ணோய் அணுகாது.
நன்றி, மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ளவும்:- ...
வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755, 8883883303.'


-------------------------------------------------------------------------(தொடரும்)