வெள்ளி, 25 அக்டோபர், 2013

சீத்தா.

 
சீத்தா.



மூலிகையின்பெயர் சீத்தா.

தாவரவியல்பெயர் -: ANNONA SQUMOSA.

;தாவரக்குடும்பம் -: ANNONACEAE.

பயன்படும்பாகங்கள் –:இலை, வேர், பழம், பழத்தின்தோல், விதை, மற்றும் பட்டை.

வகைகள் –: 1. சீத்தா-ANNONA SQUMOSA. 2. முள்சீத்தா - ANNONA MUCICATA… மேலும் 3. ராம்சீத்தா – ANNONA RETICULATE.

வளரியல்பு –:சீத்தாஒருமரப்பயிர். சீத்தாவகைகளுக்குத்தக்கவாறுஅதன்பழங்கள்இருக்கும்.இலைகளும்சிறிதுவித்தியாசப்படும். இதன்தாயகம் அமரிக்கா, மற்றும் வெஸ்ட்இண்டீஸ் என்று சொலிகிறார்கள்.ஆனால் உண்மை எது என்று தெறியவிலை .இது தட்ப வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய மரம். இதற்கு 25 டிகிரிசெண்ரிகிரேடு முதல் 45 டிகிரிசெண்ரிகிரேடு வரை வெப்பத்தில் நன்கு வளரும்.சீத்தா 18 அடிமுதல் 26 அடி உயரம் வரை வளரக்கூடியது .இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை தான் வளரும் தன்மையுடையது. இலைகள் பச்சையாக எதிர்அடுக்கில் அமைந்திருக்கும் .அகலம் சிறிதாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும்.சிறு கிளைகள் அதிகமாக இருக்கும். பூக்கள் முதலில் பச்சையாகவும் பின் மஞ்சள் நிறமாக மாறும்.பூக்கள் தடிப்பான மூன்று இதழ்களைக் கொண்டிருக்கும்.பின் பிஞ்சுகள் விட்டு காயாக மாறும்.காய்கள் ஆப்பிள் போன்று உரண்டையாக இருக்கும். ஆனால் மேல் தோல் சிறு சிறு அரைகள் போன்று அமைந்த்திருக்கும். காய் முற்றினால் சாம்பல் நிறமாகமாறும். அப்போது அதைப்பறித்துப் பழுக்கவைத்து உடனே சாப்பிடுவார்கள் .பழத்தைப் பிறித்தால் வெண்மையான சதை கொட்டைகளை மூடியிருக்கும். அந்த மிருதுவான பாகந்தான் சுவையாக இருக்கும். இதை அதிக நாள் வைத்துச் சாப்பிடமுடியாது,,அழுகிவிடும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.கொட்டை கருப்பாக இருக்கும்.சீத்தா விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

சீத்தாவில் அடங்கியுள்ள உணவுச் சத்துக்கள்.

நீர்          63.8 கிராம்.
புரோட்டீன்   1.17 கிராம்.
கொழுப்பு     0.5 கிராம்.
மாவுசத்து    20 கிராம்.
நார்சத்து      6.6 கிராம்.
கால்சியம்17.6  -  27 மில்லிகிராம்.
இரும்பு      11.4 மில்லிகிராம்.
மக்னீசியம்   84 மில்லிகிராம்.
தாமிரம்       .43 மில்லிகிராம்.
பாஸ்பரஸ்  14.7 மில்லிகிராம்
ரிபோபிளேவின் பி2 0.086 மில்லிகிராம்.
ரியாசின்    .175 மில்லிகிராம்.
அஸ்கார்பிக்அமிலம் 15.0 மில்லிகிராம்.
கலோரி   95..

சீத்தாவின்மருத்துவப்பயன்கள் .-: சீத்தாவின் இலை கசாயம் வைத்துக் குடிக்க வயித்துப் போக்கைக் கட்டுப் படுத்தும். இந்த இலை சயரோக வியாதியைக் குணப்படுத்தும். அல்சரைப் போக்கும். விதைபூச்சி க்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. இதைப்பொடி செய்து தலைக்குக் குளிக்கjப் பேன் தொல்லை நீங்கும் .விதையிலிருந்து 30 சதம் எண்ணெய் இருப்பதால் எண்ணெய் எடுக்கிறார்கள். இது சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது..பழத்தில் பவுடர் தயாரிக்கிறார்கள். இதில் வைட்டமின் சிஅதிகம் உள்ளது. இந்தப் பழத்தின் சதைப் பகுதியிலிருந்து குளிர்பானம் தயாரிக் கிறார்கள். இதில் 16.5 சர்கரை இருப்பதால் குண்டானவர்கள் சாப்பிடக் கூடாது. இதன் வேர் கருச்சிதவை கட்டுப் படுத்துகிறது. இதன் பழம் சாப்பிட இதயம் பலம் பெரும். குழந்தைகளுக்குக் கொடுக்க எலும்பு, பல் உறுதியாகும். குளிர்காச்சலைப் போக்கும். செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் குணமாகும். இலையை அரைத்துப் புண்களுக்கு வைக்க புண்கள் குணமடையும்.

முகநூலில் பாலசுப்ரமணியன் என்பவர் சீதாப்பழத்தின் மருத்துவ குணம் பற்றி அறிவிக்கிறார்----

சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில்அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும்கொண்டது.
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரியமருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும்காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது.நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவைஇப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்துதயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோகநோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர்கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவைபழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாககுணமடையும்.

மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவுபொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடிமிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர்காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்துஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம்ஏற்படும்

எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலைவலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்லபலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும்.எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலைகுணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம்சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல்அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (Annonasquamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது.ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப்பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப்பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர்வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாகஇருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாகவிரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம்தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவைநிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள்கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களைஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
முள்சீத்தா - ANNONA MUCICATA

சீத்தா மரம்.


ராம்சீத்தா – ANNONA RETICULATE.

தொடரும்)----------------------------------------------------------------------------------- .